செய்திகள்
வாசிம் ஜாபர் - டோனி

டோனி குறித்து வாசிம் ஜாபர் வெளியிட்ட ருசிகர தகவல்

Published On 2020-03-31 05:58 GMT   |   Update On 2020-03-31 05:58 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி குறித்து வாசிம் ஜாபர் ருசிகர தகவலை வெளியிட்டுள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபரிடம் டோனி குறித்து உங்களது மறக்க முடியாத நினைவு சொல்ல முடியுமா? என்று ரசிகர் ஒருவர் டுவிட்டர் மூலம் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த ஜாபர் கூறுகையில், ‘அப்போது டோனி இந்திய அணிக்குள் நுழைந்து ஒன்றிரண்டு ஆண்டு ஆகியிருந்தது. ஒரு சமயம் டோனி என்னிடம், கிரிக்கெட் விளையாடி அதன் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்து விட்டால் போதும். ராஞ்சியில் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழ்ந்து விடுவேன் என்று கூறினார். இந்த விஷயம் இன்னும் என் மனதில் உள்ளது’ என்றார்.

2015-ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இந்திய விளையாட்டு வீரர்களிலேயே அதிகம் சம்பாதிக்கும் வீரராக டோனி அடையாளம் காணப்பட்டார். அப்போது பரிசு மற்றும் விளம்பரம் மூலம் அவர் 31 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.233 கோடி) வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News