செய்திகள்
உமேஷ் யாதவ்

தேர்வாளர்களால் நான் ஒருநாள் போட்டிகளில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை: உமேஷ் யாதவ்

Published On 2020-03-30 11:36 GMT   |   Update On 2020-03-30 11:36 GMT
டெஸ்ட் போட்டிக்கான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் உமேஷ் யாதவ், ஒயிட்பால் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காதது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வருபவர் உமேஷ் யாதவ். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கு இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் தேர்வாளர்களால் நான் ஒருநாள் போட்டிகளில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என உமேஷ் யாதவ் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘ஒருநாள் கி்ரிக்கெட்டில் ஒரு தொடர் முழுவதும் விளையாட வாய்ப்பு கிடைத்தால், நான் ஒரு விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். தேர்வாளர்களால் நான் ஒருநாள் போட்டிகளில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என உணர்கிறேன்.

ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்த பிறகு ஆறு மாதங்கள் வெளியில் இருந்தால், இது மிகப்பெரிய கஷ்டமாக இருக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது. எப்போதுமே ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். 2015 உலக கோப்பையில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், அதன்பின் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

தொடர்ந்து அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது கஷ்டமாக இருக்கும். வெளியில் உட்கார்ந்து போட்டியை பார்க்கும்போது இந்த உணர்வை நான் சற்ற உணர்ந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அந்த சூழ்நிலையை புரிந்திருக்க வேண்டும். இதில் இருந்து சற்று சறுக்கினால், அது நல்லதல்ல என உணர்ந்திருந்தேன்.’’ என்றார்.
Tags:    

Similar News