செய்திகள்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஜோடி
பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.
பாரீஸ்:
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியை சந்தித்தது.
இதில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
அரையிறுதியில் இந்திய ஜோடி ஜப்பானின் ஹிரோயுகி எண்டோ-யுடா வடானபே ஜோடியை எதிர்கொள்கிறது.