செய்திகள்
சிராக்,சாத்விக் ஜோடி

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் - டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்திய ஜோடி

Published On 2019-10-26 14:12 GMT   |   Update On 2019-10-26 14:12 GMT
பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி டென்மார்க் ஜோடியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது.
பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக்-சாத்விக் ஜோடி, டென்மார்க்கின் கிம் அஸ்ட்ரப்-ஆண்டர்ஸ் ஸ்காரப் ஜோடியை சந்தித்தது.

இதில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-13, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் இந்திய ஜோடி ஜப்பானின் ஹிரோயுகி எண்டோ-யுடா வடானபே ஜோடியை எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News