செய்திகள்
U-19 உலகக்கோப்பை அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்காவில் நடக்கிறது
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை நடத்தி வருகிறது. அடுத்த வருடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தத் தொடர் தென்ஆப்பிரிக்காவில் ஜனவரி 17-ந்தேதி முதல் பிப்ரவரி 9-ந்தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் பாகிஸ்தான் வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கனடா அணிகள் இடம் பிடித்துள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, இலங்கை, ஜப்பான் அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நைஜீரியா அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘சி’ பிரிவில் பாகிஸ்தான் வங்காளதேசம், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. ‘டி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கனடா அணிகள் இடம் பிடித்துள்ளன.