செய்திகள்
அஸ்வின்

டி20 கிரிக்கெட்: எனது நம்பிக்கை இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது- அஸ்வின்

Published On 2019-10-24 10:37 GMT   |   Update On 2019-10-24 10:37 GMT
டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் என்ற எனது நம்பிக்கை இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். ஆஃப்-ஸ்பின்னரான இவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் கொடிகட்டி பறந்தார்.

ஆனால், 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு ஒயிட்-பால் கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘என்னை சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக நான் கருதுகிறேன். 46 டி20 போட்டிகளில் 52 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளேன். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளேன். வயது ஒரு காரணமாக இருக்கும் என கருதவில்லை.

இம்ரான் தாஹிர் 40 வயது வரை விளையாடினார். நான் விதவிதமான முறையில் பந்து வீசுகிறேன். என்னிடம் அனுபவமும் உள்ளது. என்னுடைய நம்பிக்கை இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது’’ என்றார்.
Tags:    

Similar News