செய்திகள்
எம்எஸ் டோனி

ஜார்க்கண்ட் U-23 அணியுடன் பயிற்சியில் ஈடுபட்ட எம்எஸ் டோனி

Published On 2019-10-24 09:23 GMT   |   Update On 2019-10-24 09:23 GMT
சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்புவதற்காக ஜார்க்கண்ட் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் எம்எஸ் டோனி.
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் ஓய்வில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேச தொடர்களில் அவர் இடம் பெறவில்லை. சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றினார்.

ஓய்வில் இருப்பதால் எம்எஸ் டோனி மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்புவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ தலைவராக பதவி ஏற்ற கங்குலி ‘‘ஜாம்பவான்கள் உடனடியாக ஓய்வு பெற்று விடமாட்டார்கள்’’ என்றார்.

இதனால் டோனி மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் U-19 அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஜார்க்கண்ட் சீனியர் அணியுடன் இணைந்துதான் பயிற்சி மேற்கொள்ள இருந்தார். ஆனால், சீனியர் அணி இந்தியாவின் உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக சூரத் செல்கிறது. இதனால் U-23 அணியுடன் பயிற்சி மேற்கொண்டார்.
Tags:    

Similar News