செய்திகள்
முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து சிறப்பான தொடக்கம் - 77/1 (12 ஓவர்)
புனேயில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியின் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் அதிரடியாக விளையாடினார். ஹேல்ஸ் 18 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.
ராய் 10-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார். அவர் 36 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணியின் ராய், ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் அதிரடியாக விளையாடினார். ஹேல்ஸ் 18 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.
ராய் 10-வது ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்து அரைசதத்தை கடந்தார். அவர் 36 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி 12 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது.