இந்தியா

ஆந்திராவில் தனியார் தங்க சுரங்கம் பயன்பாட்டுக்கு வருகிறது

Published On 2023-10-09 07:17 GMT   |   Update On 2023-10-09 07:17 GMT
  • சோதனை அடிப்படையில் தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
  • தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், ஜோனகிரி, எர்ரகுடி, பகதி ராய் உள்ளிட்ட பகுதிகளில் டெக்கான் கோல்ட் மைன்ஸ் என்ற பெயரில் ஜியோ மைசூர் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் தங்க சுரங்கங்களை அமைத்து வருகிறது.

இந்த தங்க சுரங்கங்கள் இந்தியாவின் முதல் பெரிய தனியார் தங்க சுரங்கம் ஆகும். அடுத்த ஆண்டு அக்டோபர், நவம்பருக்குள் தங்க சுரங்கங்கள் உற்பத்தியை தொடங்கும் என நிர்வாக இயக்குனர் ஹனுமா பிரசாத் தெரிவித்தார்.

சோதனை அடிப்படையில் இந்த தங்க சுரங்கங்கள் மூலம் மாதத்திற்கு ஒரு கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தங்க சுரங்கங்கள் முழுமையான உற்பத்தியை தொடங்கும் போது ஆண்டுக்கு 750 கிலோ எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்யும்.

தங்க சுரங்கங்கள் அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக அந்நிறுவனம் ரூ.200 கோடியை முதலீடு செய்து உள்ளன என தெரிவித்தனர்.

Tags:    

Similar News