இந்தியா

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2025-08-23 09:07 IST   |   Update On 2025-08-23 09:07:00 IST
  • காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா- மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
  • தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 25ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா- மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News