இந்தியா
கிரித் சோமையா

போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - மும்பையில் பரபரப்பு

Published On 2022-04-24 01:37 GMT   |   Update On 2022-04-24 01:37 GMT
பிரதமர் மோடி இன்று மும்பைக்கு வர உள்ள நிலையில் ஆளும் சிவசேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:

மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. ரவி ராணா மற்றும் அவரது மனைவியும் அமராவதி எம்.பி.யுமான நவ்னீத் கவுர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் கிரித் சோமையா போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த சம்பவம் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

அவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர், தாராவி பகுதியிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் கர் போலீஸ் ஸ்டேசன் சென்று போராட்டம் நடத்தப் போகிறேன்.  அவர்கள் இருவரையும் சந்திப்பேன், என்னை யார் தடுக்கிறார்கள் ஏன்று பார்ப்போம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், கர் போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பா.ஜ.க. தலைவர் கிரித் சோமையா கூறுகையில், நான் அதிர்ச்சியடைந்தேன். 50 காவலர்கள் முன்னிலையில் கர் காவல் நிலைய வளாகத்தில் சிவசேனாவின் 100 தொண்டர்கள் என்னை கற்களால் தாக்கினர். அவர்கள் என்னைக் கொல்ல விரும்பினர். இத்தனை மாபியா சேனா கட்சியின்  ரவுடிகள் காவல்நிலையத்தில் கூடுவதற்கு போலீஸ் அனுமதித்தது எப்படி? போலீஸ் கமிஷனர் என்ன செய்கிறார்? உத்தவ் தாக்கரேவின் ரவுடிகள் என்னை கொல்ல முயற்சிப்பது இது 3வது முறையாகும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரது புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீஸ் தர்ப்பில் கூறப்பட்டது.
Tags:    

Similar News