இந்தியா
கொலை

இரண்டு வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை- உ.பியில் பயங்கரம்

Published On 2022-04-23 07:31 GMT   |   Update On 2022-04-23 07:31 GMT
இந்த கொலைக்கு காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிரக்யாக்ராஜ்:

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தலையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 2 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளார். 

வீட்டில் இருந்த ராம்குமார் யாதவ் (55), அவரது மனைவில் குசும் டேவி (52), மகள் மணீஷா (25), மருமகள் சவீதா (27) மற்றும் ராம்குமாரின் பேத்தி மீனாக்‌ஷி (2)) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவரும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு பின் வீட்டிற்கு நெருப்பு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு உள்ளான ராம்குமாரின் மற்றொரு பேத்தியான சாக்‌ஷி என்ற 5 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது.

மேலும் ராம்குமாரின் மகன் சுனில் வீட்டில் இல்லாததால் அவரும் தப்பித்துள்ளார். இந்நிலையில் உயிர் தப்பிய 5 வயது குழந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதலில் ஒரு வீடு தீப்பிடித்துவிட்டது என்று தகவல் வந்துதான் நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அங்கே 5 பேர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 5 வயது குழந்தை மட்டும் உயிருடன் இருந்தது. குழந்தையின் தந்தை சுனில் வீட்டில் இல்லாததால் அவரும் உயிர் தப்பியுள்ளார். இந்த கொலைக்கு காரணம் என்ன என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News