செய்திகள்

மேற்கு வங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் தலைவரின் மகள் கடத்தல்

Published On 2016-09-18 12:27 IST   |   Update On 2016-09-18 12:27:00 IST
மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரின் 15 வயது மகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரின் 15 வயது மகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலம், 24-வது வடக்கு பர்கானா மாவட்டத்தில் உள்ள பசிர்ஹட் பகுதியை சேர்ந்தவர் லால்டு மொன்டல். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உள்ளூர் தலைவர்களில் ஒருவரான இவர், பசிர்ஹட் நகர நகராட்சி கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

இவரது 15 வயது மகள் நேற்று கஜல்மரி பகுதியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு சென்றபோது வழியில் இடைமறித்த சிலர் துப்பாக்கி முனையில் அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக லால்டு மொன்டல் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News