உண்மை எது
பாரத் பந்த்

இந்தியா முழுவதும் 7 நாட்கள் பொதுமுடக்கம்?- தீயாய் பரவும் செய்தி

Published On 2022-03-22 13:16 GMT   |   Update On 2022-03-22 13:16 GMT
மத்திய அரசு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த போலி செய்திகளை உறுதிப்படுத்தும் பி.ஐ.பி அமைப்பு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு பாரத் பந்த் என்ற பொது முடக்கத்தை இந்தியா முழுவதும் 7 நாட்கள் அறிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.  மத்திய அரசு பொதுமுடக்கம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. போலி செய்தி பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு திட்டங்கள், அறிவிப்புகள் குறித்த போலி செய்திகளை உறுதிப்படுத்தும் பி.ஐ.பி அமைப்பு இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளது.


Tags:    

Similar News