உண்மை எது
அமித்ஷா

“ஏழைகளுக்காக பிரதமர் மோடி 24 மணி நேரம் தூங்குவார்” - அமித்ஷா பேசியதாக பரவி வரும் போலி வீடியோ

Published On 2022-02-24 12:15 GMT   |   Update On 2022-02-24 12:15 GMT
மத்திய மந்திரி அமித்ஷா பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
புது டெல்லி:

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், "பிரதமர் மோடி ஏழையின் நலத்திற்காக 24 மணி நேரம் தூங்குவார். மம்தா பானர்ஜியோ தனது மருமகனை எப்போது முதலமைச்சர் ஆக்கலாம் என யோசித்து கொண்டிருப்பார்" என பேசுவது போல இருக்கிறது. இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.



உண்மையான வீடியோ கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பேசியபோது எடுத்ததாகும். அதில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசும் அமித்ஷா, ‘பிரதமர் மோடி ஏழைகளின் நலனுக்காக 24 மணி நேரம் சிந்தித்துகொண்டிருப்பார். மம்தாவோ தனது மருமகனை முதலமைச்சர் ஆக்குவது குறித்து சிந்தித்துகொண்டிருப்பார்’ என பேசியுள்ளார்.

இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு சிந்தித்துகொண்டிருப்பார் என்பதை தூங்குவார் என மாற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News