உண்மை எது
ரூபாய் 500 நோட்டு

இந்த மாதிரி இருந்தால் அது போலி நோட்டு - வைரல் தகவலை நம்பலாமா?

Published On 2021-12-28 10:45 IST   |   Update On 2021-12-28 10:45:00 IST
இந்திய ரூபாய் நோட்டுக்கள் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


போலி ரூபாய் நோட்டுக்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் சமூக வலைதளங்கள் நிறைந்துள்ளன. போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பற்றிய விவரங்கள் பல்வேறு வலைதளங்கள் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சில நாட்களாக ரூபாய் நோட்டுக்கள் பற்றிய புது தகவல் வைரலாகி வருகிறது.

அதில் 'ரூ. 500 நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் அருகில் உள்ள பச்சை நிற ஸ்ட்ரிப் இருந்தால், அது போலி ரூபாய் நோட்டு.  வழக்கமாக பச்சை நிற ஸ்ட்ரிப் ஆர்.பி.ஐ. கவர்னர் கையெழுத்தின் அருகில் தான் இருக்கும்,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



இதுகுறித்த இணைய தேடல்களில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் பி.ஐ.பி. நிறுவனம் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களின்படி இருவித ரூபாய் நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ போலியான ஒன்று என்றும் தெரிவித்தது.

Similar News