செய்திகள்
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும்- ஏ.சி.சண்முகம் பதிலடி

Published On 2019-07-07 14:50 GMT   |   Update On 2019-07-07 14:50 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு முன்பாகவே முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பிரசாரத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்.

மத்திய அரசின் பட்ஜெட், தொலைதூர காலத்தை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட்டாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர். அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை திசை திருப்பி வென்றனர்.

ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார்? என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்.


மத்தியில் நடைபெறும் மோடி அரசுக்கும், மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.

இவ்வாறு துரைமுருகன் பேட்டிக்கு ஏ.சி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
Tags:    

Similar News