செய்திகள்
கோபி அருகே சம்பளம் கொடுக்க கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல்
கோபி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் சம்பளம் கொடுக்க கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019
கோபி:
கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் உமாபதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி விசாரித்து சோதனை செய்தனர். இதில் சேதுராமன் என்பவர் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 450 கொண்டு சென்றது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என தெரிகிறது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
கோபி வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து சேதுராமன் பவானிசாகர் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக கொண்டு சென்றது விசாரணை தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019