நிதி அமைச்சருடன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
- அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
- வளர்ச்சிக்கு தேவையானவற்றை அரசு செய்ய வேண்டும்
திருப்பூர் :
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். திருப்பூர் மாநகரில் பின்னலாடை தொழில் நிலவரம், தொழில் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார். தொழில் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனையும் சந்தித்து பேசினர்.
இதுகுறித்து ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறும்போது, திருப்பூரின் தொழில் நிலை குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சரிடம் முறையிட்டோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையானவற்றை அரசு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். தொழில் வளர்ச்சிக்கு தேவையானவை குறித்து தொழில்துறையினருடன் கலந்து ஆலோசிக்க திருப்பூர் வர வேண்டும் என்று அமைச்சருக்கு அழைப்பு விடுத்தோம். நிச்சயம் திருப்பூர், கோவை வந்து தொழில்துறையை சந்தித்து கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார் என்றார்.