உள்ளூர் செய்திகள்

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது

Published On 2022-11-16 11:50 IST   |   Update On 2022-11-16 11:50:00 IST
  • தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
  • சதீஸ் மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை:

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள பொதிகுழத்தை சேர்ந்தவர் சதீஸ்(38). இவர் விறகு கரி மூட்டம் போடும் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேகா, லதா, முருகலட்சுமி ஆகிய 3 மனைவிகள் உள்னர்.

கருத்து வேறுபாடு காரணமாக ரேகா, லதா பிரிந்து சென்று விட்டனர். கடந்த சில ஆண்டுகளாக முருகலட்சுமியுடன் அருப்புக்கோட்டை அருகே சின்னகட்டங்குடியில் சதீஸ் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சதீஸ் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக அந்த பெண்ணிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய மைனர் பெண்ணை சம்பவத்தன்று சதீஸ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் மைனர் பெண் மாயமானது தொடர்பாக அவரது தந்தை அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி உளுந்தூர்பேட்டையில் தங்கியிருந்த அந்த பெண்ணை மீட்டனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருந்த சதீஸை அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியில் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். அவர்மீது குழந்தை திருமண தடுப்புச்சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மீட்கப்பட்ட மைனர் பெண் விருதுநகர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags:    

Similar News