உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே போக்குவரத்து நெரிசலை கண்டித்து பொதுமக்கள் மறியல்

Published On 2023-02-06 14:37 IST   |   Update On 2023-02-06 14:37:00 IST
  • திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருபுறமும் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை கீழ்நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News