உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் படகில் இருந்து தவறி விழுந்து சென்னை மாணவர் பலி

Published On 2023-01-18 11:05 IST   |   Update On 2023-01-18 11:05:00 IST
  • படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார்.
  • போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி பாத்திமா நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஜெரி. இவரது மகன் ஜெனிட்டோ (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி ஊருக்கு வந்திருந்தார். நேற்று நண்பர்களுடன் புதிய துறைமுகம் அருகே உள்ள உப்பாற்று ஓடைக்கு குளிக்க சென்றார். பின்னர் நேற்று இரவு அவர்கள் படகு சவாரி சென்றனர்.

உப்பாற்று ஓடையானது மிகவும் ஆழம் கொண்டது. மேலும் இது கடலில் சென்று சேருகிறது. படகு சவாரி சென்ற போது திடீரென ஜெனிட்டோ படகில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் தெர்மல் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார், மீனவர்கள், மீட்பு துறையினர் விரைந்து சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். வெகுநேரம் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது. அப்போது ஜெனிட்டோ சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் தங்கராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News