உள்ளூர் செய்திகள்

அகதிகள் முகாமில் வீடு புகுந்து காதலியை கத்தியால் குத்திய வாலிபர்

Published On 2022-10-31 09:57 GMT   |   Update On 2022-10-31 09:57 GMT
  • கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த இளம்பெண் மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  • மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் முகமது சாதிக். இவரது மகள் சல்மியா பானு (வயது 26). இவரும் மண்டபம் ஏ.கே.எஸ். தோப்பு பகுதியை சேர்ந்த காசி விக்னேஸ்வரன் (28) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சல்மியா பானுவை தனக்கு பதிவு திருமணம் செய்து தருமாறு காசி விக்னேஸ்வரன் கேட்டுள்ளார். பெரியவர்களிடம் பேசிவிட்டு பின்னர் சொல்கிறேன் என்று கூறி அனுப்பியுள்ளனர். அதனை தொடர்ந்து சல்மியா பானுவிடம் செல்போனில் பேசி வீட்டை விட்டு வருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

இதில் ஆத்திரமடைந்த காசி விக்னேஸ்வரன், சல்மியா பானு வீட்டிற்கு நேரில் வந்து தகராறு செய்துள்ளார். அப்போது தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சல்மியா பானுவின் முதுகு, வலது மற்றும் இடது கைகளில் வெட்டினார். தடுக்க வந்த முகமது சாதிக் மற்றும் அவர் மனைவியை கல்தூணில் பிடித்து தள்ளிவிட்டு, தகாத வார்த்தைகளை பேசி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்த சல்மியா பானு மண்டபம் கேம்ப் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மண்டபம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விக்னேஸ்வரனை தேடி வருகின்றனர். வீடு புகுந்து இளம்பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தால் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News