உள்ளூர் செய்திகள்

பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது வழக்கு

Published On 2022-07-04 05:24 GMT   |   Update On 2022-07-04 05:24 GMT
  • பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை வீட்டை விட்டு துரத்திய கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • கணவர் அசோக்குமார் மாமனார் மரியசவரி, மாமியார் பாத்திமா மேரி, அசோக்குமாரின் சகோதரர்கள் பீட்டர் வினோத், வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள டி.சிந்தலைச்சேரியைச் சேர்ந்த மரியசவரி மகன் அசோக்குமார். இவருக்கும் மெர்சிலின் கிரிஜா என்பவருக்கும் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் 4ந் தேதி திருமணம் நடந்தது.

கிரிஜா கருவுற்றிருந்த நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டுமென கணவர் குடும்பத்தினர் கூறி வந்துள்ளனர். ஆனால் கிரிஜாவுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தை பிறந்த விபரம் அறிந்தவுடன் அவர்கள் கிரிஜாவை சந்திக்கவில்லை. இதனையடுத்து வீட்டுக்கு சென்ற கிரிஜாவை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.

அவர் கதறி அழுதபோதும் கேட்காமல் இனிமேல் வீட்டில் இருந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிரிஜா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் கணவர் அசோக்குமார் மாமனார் மரியசவரி, மாமியார் பாத்திமா மேரி, அசோக்குமாரின் சகோதரர்கள் பீட்டர் வினோத், வில்லியம் ஆகிய 5 பேர் மீதும் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News