உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

Published On 2022-06-15 12:02 IST   |   Update On 2022-06-15 12:02:00 IST
  • மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.
  • போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பொன்னேரி:

மீஞ்சூரை அடுத்த புங்கம்பேடு சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சுந்தர் பாபு.

ரெயில்வே ஊழியர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொன்னேரியில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த காதணி விழாவிற்கு சென்றார்.

இரவில் சுந்தர் பாபு வேலைக்கு செல்வதற்காக திரும்பி வந்தபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 7 சவரன் நகை உண்டியல் பணம் ரெயில்வே அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பீரோவில் கவரிங் நகைகளுடன் கலந்திருந்த தங்க நகை மட்டும் கொள்ளையர்கள் பிரித்தெடுத்து கவரிங் நகையை வீசி விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.

Tags:    

Similar News