உள்ளூர் செய்திகள்

குட்கா பதுக்கி விற்றவர் கைது

Published On 2023-02-10 12:03 IST   |   Update On 2023-02-10 12:03:00 IST
  • குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல்.
  • போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொன்னேரி:

பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சோதனை செய்த போது ஒரு வீட்டில் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பதுக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முசாம்பீர் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News