செங்கல்பட்டு மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கு வரைவு வாக்காளர் பட்டியல்- கலெக்டர் வெளியிட்டார்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
- நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களை கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராகுல் நாத் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதனை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் பெற்றுக் கொண்டார். வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மாவட்ட ஊராட்சி-16, மாநகராட்சி-70, நகராட்சிகள்-108, பேரூராட்சிகள்-99 என மொத்தம் 293 உள்ளது. மேலும் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (4-ந்தேதி) வெளியிடப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.