ஆந்திராவுக்கு ஆட்டோவில் கடத்திய 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
- திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
- வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தொடர்ந்தாலும் ரேசன் அரிசி கடத்தல் நீடித்து வருகிறது. வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் கணேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின் படி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ஊத்துக்கோட்டை 4 ரோடுகள் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி தெலுங்கு காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கஜேந்திரனை கைது செய்தனர். ஆந்திராவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.