உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 90 ஆயிரம் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

Published On 2023-03-12 06:59 GMT   |   Update On 2023-03-12 06:59 GMT
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்.
  • திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு நாளை (13-ந் தேதி) தொடங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பிளஸ்-2 தேர்வு காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 90 ஆயிரத்து 723 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ்-2 தேர்வை 6,903 மாணவர்கள், 7,014 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 917 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 14-ந் தேதி தொடங்கும் பிளஸ்-1 தேர்தலை 13 ஆயிரத்து 114 பேரும், அடுத்த மாதம் 6-ந் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 16 ஆயிரத்து 434 பேரும் எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க 80 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 100 மையங்களில் 33 ஆயிரத்து 948 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர். பிளஸ்-1 தேர்வை 30,891 பேர் எழுத உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 20 ஆயிரத்து 790 மாணவர்கள், 22 ஆயிரத்து 68 மாணவிகள் என மொத்தம் 42 ஆயிரத்து 858 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பிளஸ்-1 தேர்வை 44 ஆயிரத்து 356 பேர் எழுத உள்ளனர்.

இதில் பிளஸ்-2 தேர்வை 171 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 தேர்வை 173 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளும் எழுத உள்ளனர்.

Tags:    

Similar News