பொன்னேரியில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 6 பேர் கைது
- மெதூர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர்கள் காளிதாஸ்.
- பொன்னேரி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த மெதூர் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருபவர்கள் காளிதாஸ், ராகுல். நேற்று இரவில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரம்பி கொண்டிருந்தபோது 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் ஒரு இருசக்கர வாகனத்திற்கு 1000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினர்.
ஊழியர் காளிதாஸ் பணம் கேட்ட போது மற்ற 2 வண்டிகளையும் சேர்த்து பெட்ரோல் நிரப்ப வேண்டும். பின்னர் பணம் கொடுப்பதாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காளிதாசை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் காளிதாஸ் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து தப்பி ஓடிய பொன்னேரி பகுதியை சேர்ந்த தீபக் (22), மணி (22), அபூபக்கர் (21), கண்ணன் (21), சித்திக் பாஷா (23), விஜய் (24) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விசாரணை செய்ததில் அவர்கள் பல்வேறு குற்றவழகில் ஈடுபட்டவர்கள் என்பதும் போதை மாத்திரை உபயோகிருப்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை விசாரணை செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.