உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மழையால் தொகுப்பு வீடுகள் சேதம்

Published On 2022-11-18 11:03 GMT   |   Update On 2022-11-18 11:03 GMT
  • 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.
  • பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார்.

மீஞ்சூர் ஒன்றியம் நெய்த வாயல் ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் 20 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த நிலையில் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கடந்த சில நாளுக்கு முன்பாக பெய்த மழையால் மேற்கூரை பழுதடைந்தும், சிமெண்ட் கலவை பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுகுறித்து அங்கு வசிப்பவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் சேதம்அடைந்த தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் பாலன் உடன் இருந்தார்.

Tags:    

Similar News