உள்ளூர் செய்திகள்

ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவிக்கு கேடயம்

Published On 2023-08-21 08:54 GMT   |   Update On 2023-08-21 08:54 GMT
  • நிரஞ்சனா 12 ஆண்டு காலமாக ஆக்ஸ்போர்டு பள்ளியில் பயின்று வருகிறார்.
  • பள்ளி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்காக மாணவியின் பெற்றோர்களை அழைத்து கேடயம் வழங்கப்பட்டது.

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சங்க முன்னாள் தலைவர் கே.ஆர்.பால்துரை, ஜானகி ஆகியோரின் பேத்தியும், கீழப்பாவூர் யூனியன் முன்னாள் ஒன்றிய தலைவர் வே.ஆறுமுகநாடார்-முத்தம்மாள் ஆகியோரின் பேத்தியும், பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ- வி.எ.லதா தம்பதியின் மகள் நிரஞ்சனா 12 ஆண்டு காலமாக தென்காசி குத்துக்கல்வலசையில் உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியில் பயின்று வருகிறார். மாணவி நிரஞ்சனா பள்ளி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தமைக்கு பெற்றோர்களை அழைத்து நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரிய , ஆசிரியைகள் அனைவரும் பாராட்டி கேடயம் வழங்கினர்.

Tags:    

Similar News