உள்ளூர் செய்திகள்

கோவிந்தபேரி ஊராட்சியில் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை திறப்பு

Published On 2023-06-11 08:42 GMT   |   Update On 2023-06-11 08:42 GMT
  • கோவிந்தபேரி நடுத்தெருவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
  • புதிய சிமெண்ட் சாலையை ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் திறந்து வைத்தார்.

கடையம்:

கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில், நடுத்தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.48 லட்சத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி சிமெண்ட் சாலையை திறந்து வைத்தார்.

விழாவில் துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர் இளவரசி பார்த்திப கண்ணன், பொன்னுத்தாய் முருகன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பூலோக பாண்டியன் மாணிக்கம், மக்கள் நலப்பணியாளர் கிருஷ்ணன், மாரித்துரை, குமார், தங்கசாமி பாண்டியன், தங்க தேவர், வெள்ளத்துரை பாண்டியன், சுப்பையா பாண்டியன், என்.எஸ். மணியன், காளிமுத்து, முப்புடாதி கணேசன், சப்ரி, சாமுவேல், அந்தோணி, பிரியா, அன்னம்மான், தேன்மொழி, இசக்கியம்மாள், ராணி லெட்சுமி, சத்யா, ஊராட்சி செயலர் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News