உள்ளூர் செய்திகள்

தஞ்சையில், நாளை மின் நிறுத்தம்

Published On 2023-05-17 10:11 GMT   |   Update On 2023-05-17 10:11 GMT
  • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
  • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடை பெற உள்ளது.

எனவே மங்களபுரம் மின் வழித்தடத்தில் உள்ள டி.பி.எஸ்.நகர், ராம்நகர் 1 முதல் 4-ம் தெரு வரை, பாலாஜி நகர் 1 முதல் 7-ம் தெரு வரை, பி.எஸ்.என்.எல். குடியிருப்பு மெயின்ரோடு வரை காலை 9.30 மணி மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News