உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிய காட்சி.


கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்- திருப்பூரில் இந்து முன்னணி மாநில தலைவர் கைது

Published On 2022-08-16 07:56 GMT   |   Update On 2022-08-16 07:56 GMT
  • திருப்பூர் மாநகராட்சி முன்பு போலீஸ் தடையை மீறி இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசையும் போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திருப்பூர்:

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்தநிலையில் திருப்பூர் மாநகராட்சி முன்பு போலீஸ் தடையை மீறி இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசையும் போலீசாரையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாநில செயலாளர் கிஷோர் குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News