உள்ளூர் செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிக்க முயன்ற கைதி- சுற்றி வளைத்த போலீசார்

Published On 2023-01-13 08:48 GMT   |   Update On 2023-01-13 08:48 GMT
  • மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் ஜோதி மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.
  • தப்பிக்க முயன்ற கைதியை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி பாண்டியன். இவரது மகன் கார்த்திக். இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியதாக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜோதி மாரியப்பனை கைது செய்தனர்.

பின்னர் அவரை சங்கரன்கோவில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் அங்கிருந்த மின்விளக்கை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த போலீசார், ஜோதி மாரியப்பனை சுற்றி வளைத்து பிடித்தனர். இதைத்தொடர்ந்து அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Tags:    

Similar News