உள்ளூர் செய்திகள்
சினிமா உதவியாளரிடம் செல்போன் பறிப்பு
- யுவராஜ் சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். சினிமாத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு பணி முடிந்து அதே பகுதி எம்.ஜி.சக்ரபாணி நகர் வழியாக செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென யுவராஜின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.