உள்ளூர் செய்திகள்
ஜவுளிக்கடையில் நடந்த படப்பிடிப்பில் நடிகரின் செல்போன் திருட்டு- 2 பெண்கள் துணிகரம்
- தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
- செல்போன் திருட்டு தொடர்பாக அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
கொளத்தூர்:
புழுதிவாக்கம், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் அழகப்பன். தனியார் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நேற்று பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அழகப்பன் தனது விலை உயர்ந்த செல்போனை அங்கிருந்த மேஜை மீது வைத்து இருந்தார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது செல்போன் திருடுபோய் இருந்தது.
கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஜவுளி வாங்க, வாடிக்கையாளர் போல் வந்த 2 இளம்பெண்கள், நடிகர் அழகப்பனின் செல்போனை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அழகப்பன் திரு.வி.க. நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து நடிகரின் செல்போனை திருடிய பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.