உள்ளூர் செய்திகள்
காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
காவலர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆட்சியை விட சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆதாரப்பூர்வமாக வெளியிட தயாராக உள்ளோம். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் சட்ட ஒழுங்கு குறித்து பொது விவாதம் நடத்தவும் தயாராக உள்ளோம். ரவுடிகள் கட்டுப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஆட்சியை விட குற்ற எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஆட்சியில் போதைப்பொருள் கடத்தலை கண்டு கொள்ள வில்லை. நாங்கள் கடத்தலை தடுத்து குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம். 390 காவலர்களை நியமித்துள்ளோம்.
நவீன வசதிகள் கொண்ட
வாகனங்கள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. 600 ஊர்க்கால்நடை வீரர்கள், 200 காவலர்கள் என புதிதாக ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மின்துறை தனியார்மய கேள்வி எழுப்பியபோது, கருத்துச்சொல்ல விருப்பமில்லை என அமைச்சர் நமச்சிவாயம் மறுத்தார்.