உள்ளூர் செய்திகள்
திருக்கனூர் கடை வீதியில் தக்காளி ரூ.70-க்கு விற்கப்பட்ட காட்சி.

தக்காளி விலை குறைந்தது

Published On 2022-05-25 05:50 GMT   |   Update On 2022-05-25 05:50 GMT
திருக்கனூரில் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவையில் கடந்த சில நாட்களாக தக்காளின் விலை உயர்ந்து வருகிறது.

திருக்கனூர் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி
ரூ.10-க்கு  வாகனங்கள் மூலமாக கூவிக்கூவி விற்க்கப்பட்டது. 

பின்னர் படிப்படியாக தக்காளி விலை உயரத் தொடங்கியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிகபட்சமாக தக்காளி விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.100-க்கு திருக்கனூர் கடைவீதியில் விற்கப்பட்டது.

வரலாறு காணாத விலை உயர்வால் தக்காளி வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.விலை உயர்வால் ஒரு கிலோ வாங்கும் பொதுமக்கள் கூட ¼ கிலோ என்ற அளவிலேயே தக்காளிப் பழங்களை வாங்கிச் சென்றனர். 

ஓட்டல்களில் தக்காளி சட்னி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது. அதற்கு மாற்றாக புதினா சட்னி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் நேற்று தக்காளி விலை ஓரளவிற்கு குறைந்து திருக்கனூர் கடை வீதியில் வாகனங்கள் மூலமாக கிலோ ரூ.70-க்கு விற்க்கப்பட்டது.

மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 தக்காளி விலை குறையத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.
Tags:    

Similar News