உள்ளூர் செய்திகள்
சட்டசபை காவலரை தாக்கி கொலை மிரட்டல்
கணவன்-மனைவிக்கிடையே தகராறு தட்டிக்கேட்ட சட்டசபை காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை லலித் தொலாத்திரே வீதியை சேர்ந்தவர் சிவபாலன். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேதி சிவபாலன் அவரது நண்பர் ஜெயசிங்குடன் சரண்யாவின் வீட்டுக்கு சென்று ஆபாசமாக திட்டி தகராறு செய்து கொண்டிருந்தார்.
இதனையறிந்த சரண்யாவின் உறவினரான ஓய்வு பெற்ற சட்டசபைகாவலர் புண்ணியமூர்த்தி(வயது62) இதுகுறித்து தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சிவபாலன் அவரையும் ஆபாசமாக திட்டி கையால் தாக்கினார்.
மேலும் மரக்கட்டையால் தலையில் பலமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் புண்ணியமூர்த்திக்கு ரத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்கா முடியாமல் சத்தம் போடவே கூட்டம் கூடியது. இதனை சரண்யா தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இதில் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் செல்போனை பிடுங்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து புண்ணியமூர்த்தி பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.