உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க நிதி

Published On 2022-02-21 09:34 IST   |   Update On 2022-02-21 09:34:00 IST
ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.12.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை ரோடியர் மில்லில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இருந்த ஆலையை புதுவை அரசு எடுத்துக் கொண்டது. ஆலை விரிவாக்கம், நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகளால் லாபத்தில் இயங்கி வந்த பஞ்சாலை நலிவடைந்தது.

ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல் அனைத்து பிரிவுகளும் 30.4.2020-ல் மூடப்பட்டன. 665 ஊழியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த ஊழியர்களுக்கு 2020 நவம்பரில் ரூ.6.5 கோடி, கடந்தாண்டு மார்ச்சில் ரூ.9.65 கோடி, ஆகஸ்ட்டில் ரூ.8.66 கோடி என மொத்தம் 24.81 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்டது. 

கடந்தாண்டு ஜூலை பணிக் கொடையில் 65 சதவீதமாக ரூ.17.77 லட்சம் ஒதுக்கீடு செய்து, பட்டு வாடா செய்யப்பட்டது. மீதமுள்ள 35 சதவீத பணிக் கொடை தொகையை செட்டில் செய்யும் வகையில், ரூ.12 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்து 226 இப்போது தொழில் வணிகத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. 

ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு 2012 முதல் ரூ.38 கோடி சம்பளம் நிலுவையில் உள்ளது. வருங்கால வைப்பு நிதி ரூ.16 கோடி, நலநிதி ரூ.6 கோடி, இ.எஸ்.ஐ. ரூ.4 கோடி என மொத்தம் 64 கோடி இன்னும் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது.

Similar News