உள்ளூர் செய்திகள்
காரைக்கால் திரு.பட்டினத்தில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்தவர் மரணம்
காரைக்கால் திரு.பட்டினத்தில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த நபர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வழக்கம் போல், சாராயம் வாங்கிசென்று கடை அருகே வைத்து குடித்துள்ளார்.
வழக்கத்தைவிட அதிகமாக குடித்ததால், அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பலர் அந்த நபர் குடிபோதையில் தூங்குகிறார் என சென்று விட்டனர். கடை காசாளர் தங்கபாண்டியன், அடையாளம் தெரியாத அந்த நபர் அருகே சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்து, தங்கபாண்டியன், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வழக்கம் போல், சாராயம் வாங்கிசென்று கடை அருகே வைத்து குடித்துள்ளார்.
வழக்கத்தைவிட அதிகமாக குடித்ததால், அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பலர் அந்த நபர் குடிபோதையில் தூங்குகிறார் என சென்று விட்டனர். கடை காசாளர் தங்கபாண்டியன், அடையாளம் தெரியாத அந்த நபர் அருகே சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இது குறித்து, தங்கபாண்டியன், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.