உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தல்-அ.தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-02-20 08:23 GMT   |   Update On 2022-02-20 08:23 GMT
2016 மறுசீரமைப்பை ரத்து செய்து சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தல் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீடே அளிக்காமல் தேர்தலை நடத்திக் கொள்வது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது என்று உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுவை  தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த மகாராஷ்டிர மாநில அரசை காரணம் காட்டி மக்களை திசை திருப்புகிறது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தி.மு.க.விற்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. எதையாவது ஒரு காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தின் மூலம் தேர்தலை தடுப்பதுதான் தி.மு.க.வின் உண்மை நிலையாகும்.

2016-ம் ஆண்டு நடை பெற்ற வார்டு மறுசீரமைப்பு அட்டவணையை ரத்து செய்து தேர்தலை அறிவித்தாலே பல்வேறு குழப்பங்கள் தீரும். 

எனவே, 2001-ம் ஆண்டு மக்கள் ஜனத்தொகை அடிப் படையில் அப்போதைய  நகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு, கொம்யூன் பஞ்சாயத்துக்கள், வார்டு எண்ணிக்கைகளில் மாற்றம் செய்யாமல் சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

இந்திய அளவில் புதுவையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்ற பிரதமருடைய ஆதங் கத்தை தீர்க்கும் வகையில் அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் நமது மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிய அரசு முன்வர வேண்டும். 

உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ள தி.மு.க.விற்கு, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறினார்.
Tags:    

Similar News