உள்ளூர் செய்திகள்
பொது இடத்தில் ரகளை செய்த 3 வாலிபர்கள் கைது
முதலியார்பேட்டையில் பொது இடத்தில் ரகளை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை உடையார்தோப்பு பகுதியில் 3 வாலிபர்கள் நின்றுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்ததாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் போலோஸ்நகர் ஒசனாம்வீதியை சேர்ந்த வில்லியம் ஜான்(வயது21), உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோகுல்(21) மற்றும் முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் அரசு குடியிருப்பை சேர்ந்த முகேஷ்(22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.