உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மோட்டார் சைக்கிள் மோதி 3 பெண்கள் படுகாயம்

Published On 2022-02-19 13:58 IST   |   Update On 2022-02-19 13:58:00 IST
கரியமாணிக்கம் அருகே நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் மோதி 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி:

விழுப்புரம் மாவட்டம், கொத்தபுரிநத்தம் பகுதியைச் சேர்ந்த ராமு.இவரது மனைவி ஞானசுந்நரி (வயது 35).இவர் கரியமாணிக்கம் அடுத்த சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

இவருடன் அதே பகுதியை சேர்ந்த மகாதேவன் மனைவி சுகன்யா (22), அஞ்சாபுலி மகள் ஷாலினி (22) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி வேலை முடிந்து கரியமாணிக்கம் -மதகடிப்பட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால்  மோட்டார் சைக்கிளில் வந்த நபர் எதிர்பாராத விதமாக நடந்து சென்ற ஞானசுந்தரி, சுகன்யா, ஷாலினி ஆகியோர் மீது மோதினார். 

இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News