உள்ளூர் செய்திகள்
ஏம்பலம் செல்வம்

புதுவை சட்டமன்றம் 23-ந்தேதி கூடுகிறது- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2022-02-18 15:22 IST   |   Update On 2022-02-18 15:22:00 IST
புதுவை சட்டமன்றம் 23-ந்தேதி கூடுகிறது.
புதுச்சேரி:

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் 18-ந்தேதி நிருபர்களிடம் கூறியதாவது:-

 வருகிற 23-ந்தேதி புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் கூடுகிறது. கவர்னர் தமிழிசை கூட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். 1963-ம் ஆண்டு சட்டமன்ற விதிகளின்படி 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற விதிகளின்படி சபை கூட்டப்படுகிறது. 

எத்தனை நாள் கூட்டத்தொடர் என்பதை சட்டமன்ற அலுவல் குழு முடிவு செய்யும். புதிய சட்டமன்றம் கட்டும் பணிகள் தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசு பேசி வருகிறது.  மத்திய அரசில் இருந்து தொடர்பு கொண்டு பேசினர். விரைவில் சட்டமன்றம் கட்ட டெண்டர் கோரப்படும். 

குளிர்கால கூட்டத்தொடர் முடிந்தவுடன் கோவா, உத்திரகண்ட், ஜார்கண்ட், தெலுங்கானா, கர்நாடக மாநிலம் பெல்காமில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்றத்தை பார்வையிட உள்ளோம். அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News