உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் மின்சாதன பெட்டி சேதமடைந்த காட்சி

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ‘திடீர்’ தீ விபத்து

Published On 2022-02-17 08:58 GMT   |   Update On 2022-02-17 08:58 GMT
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது.
புதுச்சேரி:

புதுவை கோரிமேட்டில் ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

இந்த ஆஸ்பத்திரியில் புதுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து உள்புற நோயாளியாகவும் வெளிப்புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை ஜிப்மர் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் உள்ள ரத்த மாதிரிகள் சேமிப்பு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அறிந்த ஆஸ்பத்திரி ஊழியர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ஆஸ்பத்திரி காவலாளிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அறையின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மின் வயரில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து நடந்தது தெரியவந்தது.

இந்த திடீர் தீ விபத்தால் அங்கிருந்த கம்ப்யூட்டர், மின் பெட்டி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமானது. ஆனால் பெரிய அளவிலான தீவிபத்தோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது.




Tags:    

Similar News