உள்ளூர் செய்திகள்
கடிதம் அனுப்பும் போராட்டம் நடந்த காட்சி.

கடிதம் அனுப்பும் போராட்டம்

Published On 2022-02-15 14:35 IST   |   Update On 2022-02-15 14:35:00 IST
காலி பணியிடத்தை நிரப்பக்கோரி வாலிபர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரி:

மத்திய, மாநில அரசு துறைகளில் காலியாக உள்ள 60 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது.

போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பொருளாளர்  சஞ்சய், துணைத்தலைவர்கள் லீலாவதி, கவுசிகன்,  துணை செயலாளர்கள்  ரஞ்சித், ராஜ்குமார், நிர்வாகிகள் ஜெயராஜ், மேடே, செல்வராஜ், ஜான்குமார், கிருஷ்ணமூர்த்தி, நிலவழகன், நவீன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர்.

Similar News