உள்ளூர் செய்திகள்
கடலில் மூழ்கிய 2 வாலிபர்களை உயிருடன் மீட்ட போலீஸ்காரருக்கு பாராட்டு
கடலில் மூழ்கிய வாலிபர்களை உயிருடன் மீட்ட போலீஸ் காரர் சவுந்தரராஜனை ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் பாராட்டினார்.
புதுச்சேரி:
கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு (22), சபரிஷ் (24).
இவர்கள் தங்கள் நண்பர்களுடன் புதுவையில் நடந்த திருமணத்தில் பங்கேற்றுவிட்டு புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே உள்ள கடலில் குளித்தனர். அப்போது ராட்ச ஆலை ஒன்று விஷ்ணு, சபரிஷை இழுத்து சென்றது.
இதைக்கண்ட அவர்களின் நண்பர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கடலோர காவல் படை போலீஸ் காரர் சவுந்தரராஜனை உதவி அழைத்தனர். அவர் சீருடையுடன் கடலில் இறங்கி அலையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்களை உயிருடன் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தார்.
சிகிச்சைகாக இருவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரிதமாக செயல்பட்டு இளைஞர்களை காப்பற்றிய போலீஸ்காரர் சவுந்தரராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதை பார்த்தவர்கள் போலீஸ்கார் சவுந்தரராஜனை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் காரர் சவுந்தரராஜனை ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் தனது அலுவலகத்தில் அழைத்து பாராட்டி கவுரவித்தார்.
இதன்பின் ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் நிருபர் களிடம் கூறியதாவது:&
சவுந்தரராஜனின் பணியால் காவல் துறை பெருமை கொள்கிறது. மற்ற போலீசாரும் இது போன்று சேவையாற்ற வேண்டும். காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இப்போது உடல்தகுதி தேர்வு முடிந்து, எழுத்து தேர்வுக்கு தயாராகி வருகிறோம்.
காலியாக உள்ள ஊர்க்காவல் படைவீரர், உதவி சப்&இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவை வெடி குண்டு தயாரிக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கேயே சென்று குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.