உள்ளூர் செய்திகள்
91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 12-ந் தேதி 1758 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 91 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 52 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும் மாகியில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேரும், கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 பேரும், அரசு மார்பக நோய் மருத்துவமனையில் 6 பேரும், கோவிட் கேர் சென்டர்களில் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் 42 பேரும், வீட்டு தனிமையில் 1255 பேரும் என ஒட்டு மொத்தமாக 1295 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 375 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 243 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,
இதில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 989 பேர் குணமடைந்துள்ளனர். 1957 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இத்தகவல்களை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது